அருள்மிகு ஸ்ரீ கண்ணகாதேவி அறக்கைங்கரிய நிகழ்வு 2.

காலம்: 2013 ஆனி 23
இடம்: சபாபதிப்பிள்ளை அகதிமுகாம்

அருள்மிகு ஸ்ரீ கண்ணகாதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த அலங்கார உற்சவங்களின் நினைவாக இவவருடமும் இரண்டாவது நிகழ்வு சபாபதிப்பிள்ளை அகதிமுகாமில் மிகவும் எளிமையாக நடாத்தப்பட்டது. திருமதி கலாநந்தினி குமாரசாமி அவர்களது உரையுடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.நிகழ்வில்  திரு நவமணி ரவிச்சந்திரன் குடும்பம் திருமதி நிவேதிகா பாஸ்கரன் ஆகிய நானும் திரு.வேலுப்பிள்ளை புஸ்பநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்

இந்நிகழ்வில் சபாபதிப்பிள்ளை மற்றும் கண்ணகி அகதிமுகாமைச்சேர்ந்த தரம் 5- புலமைப்பரசில் பரீட்சைக்கு இவவருடம் தோற்றவுள்ள 35 மாணவமாணவியர்க்கு உதவித்தொகையாக தலா 500ரூபா பணமும் 300ரூபா பெறுமதியான காகிதாதிகளும் வழங்கப்பட்டதுடன் அகதிமுகாமைச்சேர்ந்த முன்பள்ளிச் சிறார்களுக்கும் காகிதாதிகள் வழங்கப்பட்டது. மேலும் வயதுமுதிர்ந்த அன்னையொருவருக்கும் 500ரூபா பணம் வழங்கப்பட்டது. நிகழ்விற்கு வந்திருந்த அனைவருக்கும் குளிர்பானம் பிஸ்கற் வழங்கப்பட்டு கண்ணகி முகாமின் தலைவர் திரு.சிறில் அன்ரனி குயின் மற்றும் செயலாளர் பேபி சாலினி சபாபதிபிள்ளைமுகாமின் தலைவி திருமதி செல்வி சிறீ ஆகியோரின் நன்றியுரையுடனும் நிகழ்வு நிறைவுற்றது.

மேலும் மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறையைச்சேர்ந்த வறுமைக்கோட்டிற்குட்பட்ட  இளம்விதவைகளைத் தலைமையாகக்கொண்ட 8 குடும்பங்களிற்கு தலா 1500ரூபா அவர்களது வங்கிக்கணக்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இவ்வாறாக இவ்வருடத்திற்கான அறக்கைங்கரிய நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

அருள்மிகு ஸ்ரீ கண்ணகாதேவி அறக்கைங்கரிய நிகழ்வு 1

2012 வைகாசி 13ந்திகதி அன்று கண்ணகாதேவி தேவஸ்தானத்தின் அறக்கைங்கரியம் அமரர் சிவஸ்ரீ இ. நவமணி ஐயா அவர்களின் புதல்வர்கள் புதல்வியர்களது குடும்பத்தினரால். செல்வச்சந்நிதி ஆலய உலககுருநாதன் ஐயர் மடத்தில் கண்ணகாதேவியின் திருவருள் துணைக்கொண்டு, மயிலிட்டித்துறை வடக்கு கிராமஉத்தியோத்தரை பிரதமவிருந்தினராகக்கொண்டு மங்களகரமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வீரமாணிக்கதேவன்துறையைச்சேர்ந்த, குடும்பத்தலைவர்களை இழந்த, வறுமைக்கோட்டுக்குட்பட்ட 21 குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு. அவற்றில் முன்னுரிமையடிப்படையில் 16 குடும்பங்களுக்கு தலா ஐந்தாயிரம் ரூபா வீதமும் ஏனைய 6 குடும்பங்களுக்கும் தலா இரண்டாயிரம ரூபா வீதமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் எமது அழைப்பை ஏற்று திருவிழா உபயகாரர்கள் என்றவகையில் திரு சீராழபிள்ளை திருமாறன், சீராழபிள்ளை ஜெயமாறன், செல்லச்சாமி பாலசுப்பிரமணியம் திரு. பூ.நந்தகுமாரன் குடும்பத்தினர் மற்றும். ந.சிவநேசன் திரு சோ.சிவசுப்பிரமணியம் ஆகியோர் சமுகந்தந்திருந்தனர்.இவ்வாறாக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வு சிவத்திரு வ.குமாரசாமி ஐயா அவர்களின் ஆசியுரையுடன் ஆரம்பிக்கப்பட்டு. கிராமஉத்தியோகத்தரின் உரையையும் அதனைத்தொடர்ந்து அன்பளிப்புக்கள் கொடுக்கப்பட்டு பின்னர் திருமதி கு.கலாநந்தினி அவர்களது நன்றியுரையுடன் சமுகமளித்திருந்த விழா உபயகார்களது கருத்துக்கள் கேட்டறியப்பட்டது. ஏதிர்வரும் வருடாந்த அலங்கார உற்சவ ஆரம்பதினமான கொடியேற்றத்திருவிழா நாளுக்கு எமக்கு அனுமதிகிடைக்கின்றதோ இல்லையோ, அன்றையதினம் இவ்வாறானதொரு நிகழ்வை,அம்பிகையின் அலங்கார உற்சவ உபயகாரர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஏனையஅடியவர்களினதும் பங்களிப்புடன், நாம் மீள்குடியேற்றப்படும்வரை, நிகழ்த்துவது என ஏகமனதாக அறிவித்தனர். அதனைத்தொடர்ந்து அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

முன்னுரிமையடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட 17 பயனாளிகளது பெயர்விபரங்கள் வருமாறு:

1. திருமதி குட்டிக்கிளி ரஞ்சிதம்
2. திருமதி நவரத்தினசாமி சூரியகுமாரி
3. திருமதி இரவீந்திரன் அன்பரசி
4. திருமதி யோகேஸ்வரி
5. திருமதி நிசாந்தன் அமுதா
6. திருமதி குட்டித்தம்பி ரமா
7. திருமதி நல்லையா நந்தினி
8. திருமதி ஜெயவாசன் மலர்விழி
9. திருமதி கனகராசா சகிதேவி
10. திருமதி ஜெயச்சந்திரன் சந்திரா
11. திருமதி முருகையா தங்கேஸ்வரி
12. திருமதி டெமிற் தனேஸ்வரி
13. திருமதி சண்முகராஜ் றெஜினா
14. திருமதி மெய்யழகன் மரிக்கொழூந்து
15. திருமதி தங்கலிங்கம் புவனேஸ்வரி
16. செல்வி ரத்தினசிங்கம் ரஐனி
17. திருமதி துரைராசா செல்வி

இரண்டாம் பட்சமாகத் தெரிவுசெய்யப்பட்ட ஏனைய 4 பயனாளிகளது பெயர்விபரங்கள் வருமாறு:

1. திருமதி அமிர்தசிகாமணி சாவித்திரிதேவி
2. திருமதி அருளானந்தம் (மைனா)
3. திருமதி மகேந்திரம் கண்மணி
4. திருமதி கண்ணழகன் சாந்தினி