மயிலிட்டி வீரமாணிக்க தேவன்துறை
கண்ணகை அம்பாள் தேவஸ்தான திருவூஞ்சல் பாக்கள்

ஆக்கியவர்  : சிவஸ்ரீ க.மயில்வாகன ஐயர்

01.    சீர் பொருந்தும் வீரமாணிக்க தேவன்
திருத்துறை மீதமர் புன்னை செய்நீழல்
ஏர் பொருந்தும் கந்தன் மணல் நிலையமெனும் இறைவி
கண்ணகா தேவிக்கு இன்பமாக
நேர்பொருந்தும் அன்ன ஊஞ்சல் கவிதை பாட
நேசமிகு பலப்பை நகர் வாசனாகும்
கார்பொருந்தும் கணபதி தன் இருபாதம்
காப்பதாமே.

02.    வேதமொரு நான்கணுமே தூணதாக
மிக்கவறு சமயமதே வளையதாக
மேதகு நாலெண்ணறமே விட்டமாக
மேம்படும் எண்ணெண் கலையே வடமதாக
ஒதுறு சீர்ப் புராணமதே பலகையாக
உபநிடத வாகன மீது கந்து வைகிக்
காதலுடன் எமையாள்வாய் ஆடீர் ஊஞ்சல்
கண்ணகா தேவியரே ஆடீர் ஊஞ்சல்

03.    தேசிகன்றன் தேவி சுபவோரை கூற
திருமகளும் தரைமகளும் வடமதீர்ப்ப
வாசவன்றன் தேவி   புஸ்பமாரி தூவ
மலரயன்றன் மனை ஊஞ்சல் கவிதை கூற
நேச மிகு மரமகளிர் நடனமாட
நீதிபதி தன் மனையடைப்பை தாங்கி மேவ
காசனைய திருமடவாய் ஆடீர் ஊஞ்சல்
கண்ணகா தேவியரே ஆடீர் ஊஞ்சல்

04.  உவகைமிகு காளி கணங்கள் கவிதை தாங்க
சாற்றரு கங்கைகள் கவுரிதனை இரட்டத்
தூங்கு மிகு மலை மாதர் சபை நேராக்கச்
சொல்லரு நாரத மகளிர் வீணை மீட்பப்
பங்கமிலா வடிவையர்கள் பாதம் போற்ற
பரிவாக வந்தரரதுந்துபி களாற்பக்
கங்கு நிகர் குழல் மடவாய் ஆடீர் ஊஞ்சல்
கண்ணகா தேவியரே ஆடீர் ஊஞ்சல்

05.    பூரணி தன் விழிச்சுடர் மாங்கனியகத்தே
புகுந்தொரு மின்னுருவாகிப் பேழை மேவி
வாவியின் மீதுயிலிரும் வணிகேசன் தன்
மகளிருமாய் ஆயர் மனை மன்னி வைகி
சீரின் மிகு மாரன் காற்சென்றாணாணைத்
தீமை புரிந்தவன் மனையைச் சேடியாக்கும்
காரணியே மிகவருள்வாய் ஆடீர் ஊஞ்சல்
கண்ணகா தேவியரே ஆடீர் ஊஞ்சல்

06.    முத்தினை நேரினை முகைத்துப் பொன் போல்
விண்டு முகினி கராயிலை பொதுனி
புத்தி மிகுமம் மானை  புரையைக் காத்து
பாதாள வரையாகப் பருவேரோச்சி
சத்திர சாமரமணைய தன்மையீயும்
தரு நாக நீழலில் தயவாய் வைகி
கைத்தலத்தில் சிலம்பசைய ஆடீர் ஊஞ்சல்
கண்ணகா தேவியரே ஆடீர் ஊஞ்சல்

07.    சர்ப்பமணிச் சிலம்பாட நடையுமாட
சங்கைமிகு துங்க மணி மாலை யாட
பொற்பு மிகு குழையாட வளைய லாட
புகலரிய காதினிரு பொன் ஓலை யாட
நற்குமிழ்; னேர் நாசியிற் காசினியு மாட
நாடோறும் அடியவரை நன்கு காக்கும்
கற்பு மிகு பொற்புடையாய் ஆடீர் ஊஞ்சல்
கண்ணகா தேவியரே ஆடீர் ஊஞ்சல்

08.    அடியார் மிடி பொடியாக்கி நொடியில் நீக்கி
ஆங்கார பதிதர் மனம் ஏங்கி வாட
துடின மிகு கசடர் நிலை கெட்டுச்சோர
சுற்றமுளோர் நித்தமுமுன் பாதஞ் சூட
படியதனில் உனதடியார் யாரும் மல்க
பண்ணமர் பூம் புன்னை நீழல் தன்னில் வளரும்
கடிகமழ் பூங்குழல் மடவாய் ஆடீர் ஊஞ்சல்
கண்ணகா தேவியரே ஆடீர் ஊஞ்சல்

09.    சிவை சாம்பவி நடனி ஆதிசக்தி
திரி புர சுந்தரி நிமலை வாணி ஐh சஷ
பவநாசி மாதங்கி சண்டியாயி
பைரவி யோங்காரி வராகி நீலி
புவனேஸ்வரி அம்பா மகிட வைரி
போகலக்குமி யமலை பரிபூரணி
ருகள மாரி அம்பிகையே ஆடீர் ஊஞ்சல்
கண்ணகா தேவியரே ஆடீர் ஊஞ்சல்

10.    கோமளை மகேஸ்வரி ருத்திராயி
குண்டலி கல்யாணி சிவகாமி வீரி
வாமி மனோன்மணி ஐயை உமை கங்கா
மாலினி சுந்தரி கமலை மந்திர ரூபி
சோமசேகரி வாணி ராஐ ராஐp
சுபகரி மாதேவி பரை சாமுண்டாயி
காமரதி யம்பரையே ஆடீர் ஊஞ்சல்
கண்ணகா தேவியரே ஆடீர் ஊஞ்சல்

11.    திரு மருவு மன்னவனும் செங்கோலும் வாழி
திருநீறும் மஞ்செழுத்தும் சிறந்து வாழி
மரு மருவு வான் முகிலேழும் வாழி
மங்கையர் கற்புடனாலு மறையும் வாழி
உருமருவு வேதியரோடும்பர் வாழி
யொண்டளிர் சேர்ந்துலவு புன்னை நிழல் வாழி
கருமருவு சீவனுள்ளோர் யாரும் வாழி
கண்ணகா தேவியரும் வாழி ! வாழி !